Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 ஜனவரி 22 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் எழுத்தூர் கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட வீடு ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் உள்ளே சென்ற கொள்ளையர்கள், வீட்டில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய நிலையில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை, பணம் மற்றும் அலைபேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் எழுத்தூர் பகுதியைச் சேர்ந்த முருங்கன் பாடசாலையின் ஆசிரியரான நிவீன் பெணாண்டோ (வயது 47) என்பவரது வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர் மற்றும் அவருடைய மனைவி, தந்தை, மற்றும் மூன்று பிள்ளைகள் சம்பவதினமான இன்று(22) வெள்ளிக்கிழமை அதிகாலை ஆழ்ந்த நித்திரையில் இருந்துள்ளனர்.
இதன்போது, அதிகாலை 1.30 மணியளவில் வீட்டின் பின்புறமாக வந்த கொள்ளையர்கள் மூவர் வீட்டின் மீது ஏறி ஓட்டை அகற்றி உள்ளே சென்றுள்ளனர்.
இவர்களில் இருவர் முகத்தை துணியினால் மறைத்திருந்ததுடன் மற்றையவர் முகத்தை மூடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள், ஆசிரியரின் தந்தையான அலசியஸ் பெணாண்டோவை (வயது 83) கண்மூடித்தனமாக தாக்கிய கொள்ளையர்கள் அவரை கட்டிலில் கட்டி வைத்த பின் கணவன், மனைவி ஆகிய இருவரையும் கண் மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
அத்துடன், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்ததோடு பெறுமதியான அலைபேசிகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 3 பிள்ளைகளுக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
கொள்ளையர்கள் தப்பிச் சென்ற நிலையில், காயமடைந்த ஆசிரியர் அபாயக்குரல் எழுப்பியதையடுத்து, அயலவர்கள் குறித்த வீட்டுக்குச் சென்று குறித்த மூவரையும் மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த மூவருடைய தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக ஆசிரியையான இதய மலர், யாழ். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு விரைந்து வந்த பொலிஸார், தடயங்களை பார்வையிட்டதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
31 minute ago