Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் கிராமத்தின் காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக களவாக மரங்கள் அழிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் வன்னேரிக்குளம் போன்று உவராபத்தினை எதிர்கொண்டுள்ள கிராமமாக ஆனைவிழுந்தான்குளம் கிராமம் காணப்படுகின்றது.
இக்கிராமத்தில் தற்போது 450 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
உவரடைந்து வரும் இக்கிராமத்துக்கு இக் காடுதான் பாதுகாப்பு கவசமாக காணப்படும் நிலையில் இக்கிராமத்திலிருந்து பெருமளவு மரங்கள் களவாக வெட்டியெடுத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரங்கள் கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கிராமப்பிரதிநிதிகளினால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக நடைபெறும் காடழிப்பு தொடர்பாக தகுந்த நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கவேண்டுமெனவும் பொலிஸார் மரம் வெட்டுவோர் மீது கடும் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
36 minute ago
37 minute ago
50 minute ago