Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, முரசுமோட்டை, ஐயன்கோவிலடி கிராமத்துக்கான பிரதான வீதியில் அமைந்துள்ள மரப்பாலம் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதால் பொதுமக்கள் இதனூடாக பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
ஐயன்கோவிலடிக் கிராமத்தில் தற்போது சுமார் 20 குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன் இந்த கிராமத்துக்கான பிரதான வீதியில் அமைந்துள்ள மரப்பாலம் மிகமோசமாக சேதமடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது.
இப்பாலத்தினூடாக பயிர்செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகள், இக்கிராம மக்கள் என தினமும் சுமார் 100 பேர் இப்பாலத்தினூடாக போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைவிட முரசுமோட்டை மற்றும் ஊரியான் ஆகிய கிராமங்களுக்கான பொது மாயானத்துக்குச் செல்லும் பிரதான பாதையாகவும் இப்பாதை காணப்படுகின்றது. இப்பாலத்தை புனரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
20 minute ago
23 minute ago