Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
இந்திய அரசாங்கத்தின் 320 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் மன்னார், அருள்மிகு திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் கட்டுமானப்பணிகள், எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆலயத்தின் பிரதம குரு கருணானந்தக் குருக்கள் தெரிவித்தார்.
இந்தியா நாட்டின் மாமல்லபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட கருங்கல்லைப் பயன்படுத்தி குறித்த கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுமார் ஒரு வருடங்களில் இக்கருங்கல் வேலைத்திட்டங்கள் நிறைவடையும்.
இக்கட்டுமானப்பணிகளை முன்னிட்டு, கடந்த ஜுன் மாதம் 7ஆம் திகதி திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருத்தலத்திலுள்ள விக்கிரகங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.
அதனைத்தொடர்ந்து புதிய திருத்தலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, கடந்த நவம்பர் மாதம் 22ஆம் திகதி இடம் பெற்றதோடு, ஏற்கெனவே காணப்பட்ட அருள்மிகு திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் கட்டடம் தற்போது உடைக்கப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் 2017ஆம் ஆண்டு அருள்மிகு திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மஹா கும்பாபிசேகம் நடைபெறுமென ஆலயத்தின் பிரதம குரு கருணானந்தக் குருக்கள் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago
1 hours ago
2 hours ago