Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் வருகை, கடந்த இரு நாட்களாக அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், 80க்கு மேற்பட்ட றோலர்கள் வந்ததுடன், ஞாயிற்றுக்கிழமை (19) இரவு, முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் இருவரது வலைகளை இந்திய றோலர்கள் அறுத்து எடுத்துச் சென்றுள்ளன.
இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேப்பாப்புலவிலும் புதுக்குடியிருப்பிலும் தமது காணிகளை விடுவிக்குமாறு எமது மக்கள் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், முல்லைத்தீவின் உயிர்நாடித் தொழிலான கடற்றொழிலை இல்லாதொழிக்கும் வகையில், இந்திய றோலர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, சமாசத் தலைவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago