Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
எனது மகன் இராஜரட்னம் ஜெயராஜை (காணாமல் போகும்போது வயது 28) 2009ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 2ஆம் திகதி இராணுவத்தினர் இராணுவ பஸ்ஸில் ஏற்றிச் சென்றதை எனது கண்ணால் கண்டேன் என தாயொருவர் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
ஓமந்தையில் விடுதலைப் புலியினருக்கும் இராணுவத்தினருக்கும் இடம்பெற்ற மோதலின்போது எங்களை முட்கம்பிகளுக்கு இடையில் அடைத்து வைத்திருந்தார்கள். இதன்போது, குறித்த இடத்துக்கு வருகை தந்த இராணுவத்தினர் குறிப்பிட்ட சிலரை கட்டம் கட்டமாக இராணுவ பஸ்களில் ஏற்றிச் சென்றார்கள்.
என்னுடன் மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் பல பிரதேசங்களில் இருந்தவர்கள் தமது உறவினர்களை இராணுவ பஸ்ஸில் ஏற்றிச் சென்றதை கண்டப் பின்னர், இராணுவத்தினரிடம் சென்று இதுபற்றி வினவியபோது, இராணுவத்தினர் எம்மை தாக்கி விரட்டியடித்தார்கள்' என அந்த தாய் கண்ணீருடன் சாட்சியமளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
17 minute ago
30 minute ago
36 minute ago