Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Niroshini / 2017 ஜனவரி 30 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
வவுனியா வடக்கு, கனகராயன்குளம் பகுதியில் இருந்து காணாமல் போன, இரண்டு பிள்ளைகளின் தாய் தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, பாண்டியன்குளத்தைச் சேர்ந்த நிசாந்தன் யாழினி (வயது 32), தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வவுனியா வடக்கு, கனகராயன்குளம் பகுதியில் வசித்து வந்த நிலையில், கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.
குறித்த குடும்பப்பெண் காணாமல் போயுள்ளமை தொடர்பில், திகதி கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் டிசெம்பர் 31ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு மாத காலமாகியும் பெண் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
இந்தப் பெண் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள், கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திலோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
5 hours ago
5 hours ago