2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்

George   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், நடராசா கிருஸ்ணகுமார்

தமது காணிகளை முழுமையாக விடுவிக்க வேண்டும் என, கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாக, நேற்றிலிருந்து, தொடர்ச்சியான போராட்டத்தில், அந்த மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள், அம்மக்களை நேற்றுச் சந்தித்தனர்.

இதன்போது, காணிகள் முழுமையாக விடுவிக்கப்படுவது தொடர்பில் உரிய பதிலை வழங்க இரு வார கால அவகாசத்தை மக்களிடம் கோரினர்.

ஆனால், உரிய பதில் வழங்கப்படும்வரை, போராட்டத்தை தாம் கைவிடப்போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, இராணுவத்தினருடன், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் கலந்துரையாடியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .