Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி இரணைமடுக்குள இபாட் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகள் உரிய காலங்;களில் முன்னெடுக்கப்படாமையினால் காலபோக பயிர் செய்கைகளுக்கான நீர் விநியோகத்தை மேற்கொள்ள முடியாது பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2200 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனைவிட இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள நீர்ப்பாசனக் கால்வாய்கள், கழிவு வாய்க்கால்கள் என்பன இபாட் திட்டத்தின் கீழ் சுமார் 2400 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது காலபோக பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் அதற்கான நீர்விநியோகம் மேற்கொள்ளவேண்டிய நிலை காணப்படுகின்றது.
ஆனால், புனரமைப்பு பணிகள் நிறைவு பெறாமலும் குறிப்பிட்ட சில இடங்களில் நீர்ப்பாசன கால்வாய்கள் பாலங்கள் மதகுகள் தூர்க்கப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றன.
இதனால் பயிர் செய்கைகளுக்கான நீர்விநியோகம் மேற்கொள்ள முடியாத நிலையில் குறிப்பிட சில விவசாயிகள் பெரும்சிரமங்களை எதிர்கொண்;டு வருகின்றனர்.
இதனால் மேற்படி பயிர் செய்கைகளுக்கு நீர்விநியோகம் பெற்கொள்ளக்கூடிய வகையில் உடனடி மாற்று நடவடிக்கைகளை ஏற்படுத்தி தருமாறு குறிப்பிட்ட கமநல அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago
50 minute ago
1 hours ago