2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இறப்பு அத்தாட்சிப் பத்திரம் வேண்டாம்

Niroshini   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'காணாமல் போன எனது மகன் எனக்கு வேண்டும். அதற்கு பதிலாக நீங்கள் தரும் இறப்பு அத்தாட்சி பத்திரமும் நஸ்டஈடும் எனக்கு வேண்டாம்' என காணாமற்போன திருநகர் வடக்கைச் சேர்ந்த இராசரத்தினம் குகதாசன் (வயது 26) என்பவரது தாயார் தெரிவித்தார்.

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான அமர்வு, இன்று திங்கட்கிழமை (25) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே, அவர்; இவ்வாறு சாட்சியமளித்தார்.

'எனது மகனை 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி விடுதலைப் புலிகள் பிடித்துச் சென்றனர். அதன்பின்னர் காயமுற்ற எனது மகன் 2008ஆம் ஆண்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலும் மேலதிக சிகிச்சை பெற்றார்.

அதன்பின்னர் எங்களுடன் மகன் வந்து சேர்ந்தார். இடம்பெயர்ந்து, முள்ளிவாய்காலில் வசித்தபோது, 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி கடைக்குச் சென்று வருவதாக இரண்டு நண்பர்களுடன் சென்ற மகன் அதன்பின்னர் திரும்பவில்லை.

ஐ.சி.ஆர்.சி, யோசப் முகாம் ஆகியவற்றில் பதிவுகள் மேற்கொண்டும், எனது மகன் கிடைக்கவில்லை. இறுதி யுத்த காலத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் எனது மகன் வந்ததைக் கண்டதாக எனது உறவினர்கள் கூறினர். இன்று வரை எனது மகன் கிடைக்கவில்லை' என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X