2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இறம்பைக்குளம் மாணவி முதலிடம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளை பெற்று இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி, வவுனியா மாவட்டத்தில் முதலாமிடத்தினைப் பெற்றுள்ளார்.

மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை 188 புள்ளிகளை பெற்று கரிணி பரந்தாமனும் இரண்டாமிடத்தினை 187 புள்ளிகளை பெற்று அமல்ராஜ் மதுரனும் 186 புள்ளிகளை பெற்ற கர்னி சுரேஸ் மூன்றாமிடத்தினையும் 185 புள்ளிகளை பெற்று லிங்கநாதன் அகர்சன் நான்காம் இடத்தினையும் 182 புள்ளிகளை பெற்று யேசுநேசன் சதுர்சிகன், பிரணவி சஞ்சீவன் ஆகிய மாணவர்கள் ஏழாமிடத்தினையும் 181 புள்ளிகளை பெற்று பரமானந்தம் நிகேசன் ஒன்பதாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, இப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 166 பேரில் 76 பேர் சித்தியடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .