2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் முறையில் குடும்ப பதிவு

Gavitha   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் முதன்முறையாக இலத்திரனியல் முறையில் குடும்பப்பதிவு மேற்கொள்ளும் நடைமுறையை வவுனியா பிரதேச செயலகம் அறிமுகப்படுத்தியிருந்தது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராமங்களில் குடும்ப அங்கத்தவர்களின் விவரங்களை இலத்திரனியல் முறையில் கணனியில் பதிவேற்றி அனைத்து தகவல்களும் உள்ளடங்களாக குடும்ப அட்டையை பேணும் வதிவோர் தரவு முறைமையை அறிமுகம் செய்திருந்தனர்.

இதனை மக்களுக்கு அறிமுகப்படுத்தம் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (29) கள்ளிக்குளம் கிராமத்தில் வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா தலைமையில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது, வதிவோர் தரவுகள் முறைமை மூலம் குடும்ப அங்கத்தவர்கள் எவரேனும் தமது தேவையின் பொருட்டு பிரதேச செயலகத்துக்குச் செல்லும்போது தேவையான விவரங்களை பிரதேச செயலகத்தில் இருந்து உடன் பெற்றுக்கொள்ளும் விதமாகவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X