2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இலவச மின்னிணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Niroshini   / 2016 மே 01 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை மின்னிணைப்பு வழங்கப்படாதுள்ள 21,165 குடும்பங்களுக்கான இலவச மின்னிணைப்பை பெற்றுக்கொள்வதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர், மின்வலு, எரிசக்தி அமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

'கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களில் இதுவரை 42,872 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன. இவ்வாறு மீள்குடியேறியவர்களில் 21,707 பேருக்கு மாத்திரமே கடந்த காலங்களில் வடக்கின் வசந்தம் மூலம் இலவச மின்னிணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. 21,165 குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புக்கள் வழங்கப்படாத நிலையில் வடக்கின் வசந்தம் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த இலவச மின்னிணைப்பு நிறுத்தப்பட்டதன் பின்னர், கடன்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்;பட்டுள்ளது.
இதனால், இத்திட்டத்தின் பயனாளிகள் மிகவும் வறிய குடும்பங்களாக இருப்பதனால் எதிர்காலத்தில் மின் பாவனைக் கட்டணத்தையும் இணைப்புக்;கான கடன் பணத்தையும் இணைத்து செலுத்த முடியாத நிலையில் பெரும் நெருக்கடிக்குள் குறித்த குடும்பங்கள் தள்ளப்படும் அபாயநிலை காணப்படுகின்றது.
 
எனவே, இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்து மேற்குறித்த குடும்பங்களுக்கு இலவச மின்னிணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X