Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.என். நிபோஜன் / 2018 பெப்ரவரி 14 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று(14) மதியம் 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வடக்கச்சி 10 வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் நிரோசா (வயது 24) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த குறித்த பெண்ணுக்கு ஏழு மற்றும் ஒன்றரை வயதுடைய இரு பிள்ளைகள் உள்ளனர்.
பெண்ணின் கணவர் தொழிலுக்காக வெளியே சென்றுள்ளார். சடங்கு நிகழ்வு ஒன்றுக்கு அயலவர்களும் சென்றிருந்த வேளையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் பின்புறமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை குற்றத்தடயவியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .