Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 25 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் கிராம பகுதியில், பாரிய குழி ஒன்றினுள் வீழ்ந்து மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய யானை ஒன்றை, நேற்று (24) மாலை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் கிராமத்தில் வயலுக்குச் செல்லும் வீதிக்கு அருகில் காணப்பட்ட குழி ஒன்றினுள் கடந்த புதன்கிழமை யானை ஒன்று விழுந்துள்ளது.
எனினும், குறித்த யானை குழியில் இருந்து வெளியில் வர முடியாத நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில், குறித்த யானையை காப்பாற்றும் வகையில் பிரதேச மக்கள் மேற்கொண்ட முயற்சியும் பயனளிக்கவில்லை.
இந்த நிலையில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குறித்த திணைக்கள அதிகாரிகள் நேற்று (24) மாலை குறித்த பகுதிக்கு வந்து யானையை மீட்டு, காட்டுப்பகுதிக்குள் அனுப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago