2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

உழவு இயந்திரத்தில் மோதி ஒருவர் பலி

George   / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி,  இரத்தினபுரம் சந்திக்கு அருகாமையில் உழவு  இயந்திரத்துடன்  மோட்டர் சைக்கிள்  மோதி ஏற்பட்ட விபத்தில்  மோட்டர் சைக்கிளில்  பயணித்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரம்  சந்திக்கு அருகாமையில் உள்ள  வாகன  திருத்துமிடத்தில்  இருந்து, திருவையாறு நோக்கி செல்ல முற்ப்பட்ட  உழவு  இயந்திரத்துடன்  திருவையாறு பக்கத்தில் இருந்து  கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த  மோட்டர் சைக்கிளே, சனிக்கிழமை இரவு மோதியுள்ளது.

சடலம், கிளிநொச்சி  பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .