Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 07 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, பூநகரி, மண்டைக்கல்லாறு ஊடாக கடலுக்குச் செல்லும் வெள்ள நீரைத் தடுத்து, உவர் நீர்த்தடுப்பணை அமைப்பதன் மூலம், பூநகரியின் பலகிராமங்களில் காணப்படும் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என பூநகரி கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஆண்டுதோறும் மாரி மழையின் போது ஏற்படுகின்ற வெள்ளம், மண்டைக்கல்லாறு ஊடாக யாழ்ப்பாணம் மன்னார் (ஏ-32) வீதியைக் கடந்து பூநகரிக் கடலை சென்றடைகின்றது. மண்டைக்கல்லாறு பகுதி மக்கள் வெள்ளத்தை சேமித்து வைக்கவோ அல்லது அந்த நீரை விவசாய முயற்சிகளுக்கு பயன்படுத்தவோ எந்தவித முயற்சிகளும் எடுக்கவில்லை.
மண்டைக்கல்லாறு, குடமுருட்டி வழியாக பெருமளவு வெள்ள நீர் ஆண்டுதோறும் கடலைச் சென்றடையும் நிலையில், மேற்படி மழை வெள்ள நீரை சேமித்து வைப்பதன் மூலம் பூநகரியின் குடிநீர் பிரச்சனைக்கான தீர்வு எட்டப்படுவதுடன், ஒருகட்டத்தில் சேமிக்கப்படும் நீரை யாழ்ப்பாண குடிநீர் பயன்பாட்டுக்கும் பயன்படுத்த முடியும் என கிராம பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்படுகின்றது.
மண்டைக்கல்லாறு ஏ - 32 வீதியை ஊடறுத்து வெள்ள நீர் பாயும் போது, ஏ - 32 வீதியில் படகுச் சேவை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago