2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

எருமை மாடுடன் வான் மோதி விபத்து: 5 பேர் காயம்

Sudharshini   / 2016 மார்ச் 05 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதியில் வெள்ளிக்கிழமை (04)  இரவு வானொன்று எருமை மாடுடன் மோதி விபத்துக்குள்ளானதில்; ஐவர்  படுகாயமடைந்துள்ளனர் என ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு  வவுனியாவிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த வான், ஒட்டுசுட்டான் வீதியில் நின்றுக்கொண்டிருந்த எருமை மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  

காயமடைந்தவர்கள் ஒட்டுசுட்டான் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த  விபத்து தொடர்பான விசாரனைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X