Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
“எனது கணவர் மற்றும் சகோதரர் ஆகியோர் இறுதி யுத்தக் காலப்பகுதியில் காணாமற்போனார்கள். இன்று நானும் எனது அம்மாவும் எவ்வித உதவிகளுமின்றி தனித்து மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றோம்” என காணாமற்போன வி.தர்மலிங்கம் என்பவருடைய மனைவி தங்கேஸ்வரி சாட்சியமளித்தார்.
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (26) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.
“இறுதி யுத்தத்தில் 2009 ஏப்ரல் மாத காலப்பகுதியில் நான் காயப்பட்டு, மாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அத்தருணத்தில் எனது கணவர் காணாமற்போனார். நான் கப்பல் மூலம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டேன்.
எனது கணவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தமையால், அவரை புலிகள் பிடிப்பதற்கான வாய்ப்பு இல்லை. இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கண்டதாக உறவினர்கள் கூறினர்.
இதேவேளை, எனது சகோதரர் நடராஜா சதீஸ் (காணாமற்போகும் போது வயது 16), 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் பிடிக்கப்பட்டார். அதன் பின்னர் காணாமற்போனார்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
31 minute ago