2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஐயன்குளம் வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் இல்லை

George   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, ஐயன்குளம் வைத்தியசாலையானது கடந்த 2 மாதங்களாக வைத்தியர் இல்லாமல் இயங்கி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தனித்து விடப்பட்ட கிராமமாகவுள்ள ஐயன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார வைத்தியசாலைக்கே வைத்தியர் இல்லை.

இதனால், இந்தக் கிராம மக்கள் 18 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள மல்லாவி வைத்தியசாலைக்கு அல்லது அதனையும் தாண்டி கிளிநொச்சி, வவுனியா வைத்தியசாலைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது.

இந்தக் கிராமத்துக்கும் மல்லாவிக்குமான வீதியில் யானைகளின் தொல்லை காணப்படுவதால் இரவு வேளைகளில் இந்தப் பாதையூடாக பயணிக்க முடியாது என அந்த மக்கள் தெரிவித்தனர்.

வைத்தியர்களாக வெளியேறுபவர்களை, வைத்தியர்கள் இல்லாத இடங்களில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக மத்திய சுகாதார அமைச்சு உறுதி வழங்கியுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X