2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஐரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டங்கள் மன்னாருக்கும் கிடைக்கும்

Gavitha   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் வடமாகாணத்தில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டங்கள், மன்னார் மாவட்டத்துக்கு இல்லை என செய்தி வெளியாகியுள்ள நிலையில், குறித்த செய்தியை தாம் மறுத்துள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான ஒப்பந்தம், நிதி மற்றும் கணக்காய்வுக்கான தலைமை அதிகாரி டி.வில்லியம் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட பொது மக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்தை வைபவ ரீதியாக   புதன்கிழமை (30) காலை திறந்து வைத்த பின்னர், அதிகாரிகளுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் தகைமை இருந்து தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளவர்கள், தமது தகமைக்கு அமைவாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் குறித்த குறித்த மாவட்ட பொது மக்கள் தொழில் சேவை மத்திய நிலையம் திறந்த வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம.வை.எஸ்.தேசப்பிரிய, உதவி அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மெல் பிரதேச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய டி.வில்லியம், 'ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் வடமாகாணத்தில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்தில் மன்னார் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த செய்தியில் உண்மை இல்லை. ஏனைய மாவட்டங்களைப் போன்று மன்னார் மாவட்டத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத்திட்டங்கள் கிடைக்கும்' என அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .