Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.என். நிபோஜன் / 2018 ஜனவரி 29 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பணம் கொடுக்கப்பட்டபோது, ஒருவருக்கு கிடைக்கவில்லை எனில், ஏனைய 14 பேரும் கேட்டிருக்க வேண்டுமல்லவா?” என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று பரவலாக பேசப்பட்டுவரும் விடயம், 2 கோடி விவகாரம். ஒருவர் கிடைத்தது என்கின்றார். இன்னொருவர் கிடைக்கவில்லை என்கின்றார். 15 பேரில், காசு கொடுக்கப்பட்டபோது, ஒருவருக்கு கிடைக்கவில்லை எனில் ஏனைய 14 பேரும் கேட்டிருக்க வேண்டுமல்லவா? அது கேட்கப்படவில்லை. இவ்விடயம் துக்கியெறியப்பட்ட எலுப்புதுண்டுகளை தூக்கி செல்வதுபோல் உள்ளது. அவ்வாறு தூக்கி எறியப்பட்டபோது 60 மில்லியன் ரூபாய் சுமந்திரனுக்கு இலாபம் கிடைத்தது. காரின்பெறுமதியுடன் அதற்கான வரியும் நீக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் சுமந்திரனிடம் எவ்வாறு நியாயத்தை எதிர்பார்க்க முடியும். இந்த உண்மையை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்” என தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago