Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 மே 06 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபிவிருத்தி தேவையென்றால் அரசாங்கமும் வட மாகாண சபையும் ஒற்றுமையாக சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என வடமாகாண ஆளநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
விஸ்வமடு சிவில் பாதுகாப்பு தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற கௌரவிக்கும் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“நாட்டில் நிலவிய யுத்தம் முடிவடைதுள்ளது இரண்டு பக்கங்களிலும் இழப்புக்கள் இருந்தன அவை அனைத்தையும் மறந்து எமது நாட்டினை அபிவிருத்தி பாதையை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். அபிவிருத்தியை நோக்கி செல்ல வேண்டுமென்றால் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அரசாங்கமும் வட மாகாண சபை உறுப்பினர்களும் ஒற்றுமையாக சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.
நாம் வணங்கும் தெய்வங்களான புத்தராக இருக்கட்டும் விஸ்ணு வாக இருக்கட்டும் அவர்களே ஒரு ஆலயத்தில் ஒற்றுமையாக இருக்கும் போது வணங்கச்செல்கின்ற நாம் மட்டும் ஏன் சண்டை பிடிக்க வேண்டும். இனிமேல் எங்களுக்கெல்லாம் யுத்தம் வேண்டாம்” என்றார்.
“இந்த யுத்த வெற்றி பிரபாகரன் எடுத்ததா மஹிந்த ராஜபக்ஷ எடுத்ததா சிங்கள மக்கள் எடுத்ததா தமிழ் மக்கள் எடுத்ததா யாரும் எடுக்கவில்லை. ஆனால் நீங்கள் ஒருதாய் பிள்ளை போல் வேலை செய்தால் நாட்டை கட்டி எழுப்ப முடியும். பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்பதே எனது விருப்பம். அதற்காகவே நானும் பாடுபடுகிறேன்” எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
44 minute ago