2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஒளிரும் வாழ்வின் முதலாவது திட்டம்

Gavitha   / 2016 ஜனவரி 05 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

கரைதுறைப்பற்று பிரதேசச் செயலகத்துக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து, 'ஒளிரும் வாழ்வு' என்றவொரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவின் ஏற்பாட்டில், கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து, இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்ற, சாந்தி ஸ்ரீ கந்தராசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தமைக்கு அமைய, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களிலும் இந்த அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக, திங்கட்கிழமை (04) கரைதுறைப்பற்று பிரதேசச் செயலக மண்டபத்தில் சமூக சேவைகள் பிரிவின் துணையுடன் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் அவர்களின் உளவளமேம்பாடு தொடர்பாக, புதிய அமைப்பினூடாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 200க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X