Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 மே 01 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறக்கூடியதான குற்றங்களைத்தடுப்பதற்கு மதத்தலைவர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாரித சிறிவர்தன தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மதத்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று சனிக்கிழமை (30) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
போதைப்பொருள் பாவனை தற்போது அதிகரித்துக் காணப்படுவதுடன், இவ்வாறான போதைப்பொருள் பாவனையால் இளைய சமுதாயம் சீர்குலைகின்றது.
அத்துடன், சிறுவர்களின் தொலைபேசி பாவனைகள் காரணமாக பாரிய துஷ்பிரயோகங்கள், குற்றங்கள் நிகழ்கின்றன. பெற்றோர்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வுகள் மிக அவசியமாகின்றது.
அண்மை நாட்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 17 வயதுக்குட்பட்ட பெண்பிள்ளைகள் பாதிப்புக்குள்ளாகிய முறைப்பாடுகளே அதிகமாக காணப்படுகின்றன.
ஆலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் மதத்தலங்களில் வழிபாடுகள் இடம்பெறுகின்றபோது இது தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களை வழிபடுவோருக்கு வழங்குவதன் மூலம் இவற்றை தடுக்கலாம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
48 minute ago
53 minute ago
1 hours ago