Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Sudharshini / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
2016ஆம் ஆண்டிலே ஒரு குற்றச்செயல்கள் அற்ற ஒரு மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் அமைவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்ட செயலர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்;துள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்களுக்கான நற் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (21) கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
'கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஐந்து பொலிஸ் நிலையங்களின் கீழ் சமூகத்தில் அக்கறையுள்ள ஆண், பெண் இருபாலாரையும் இணைத்து ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் சிவில் பாதுகாப்புக்குழுக்கள் உருவாக்கப்;பட்டுள்ளதுடன் தலா இரண்;டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஒவ்வொரு கிராமங்களிலும் இடம்பெறக்கூடிய குற்றச்செயல்களை தடுக்கின்ற வகையில் இந்தக்குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சிவில் பாதுகாப்பு குழுக்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், கிளிநொச்சி, முழங்காவில், பச்சிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் இடம்பெற்று வந்த போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை குறித்துக் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டன.
சமுகசேவைகளில் ஈடுபாடுடைய இந்த சிவில் பாதுகாப்புக் குழுவினர் எதிர்காலத்;திலும் திறம்பட செயற்பட்ட, 2016ஆம் ஆண்டிலேயே குற்றச்செயல்கள் அற்ற ஒரு மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தை உருவாக்கவேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்' என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago