Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Kogilavani / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கோப்பாய் இராசவீதியில் உள்ள கள்ளுத்தவறணையில், ஞாயிற்றுக்கிழமை (19) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச்சம்பவத்தில், வாள்வெட்டுக்கு இலக்காகிய 3 பேர் உள்ளிட்ட 8 பேர், படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளுத்தவறணையில் வைத்து சிலருக்கிடையில், ஞாயிற்றுக்கிழமை காலையில், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாலை நேரத்தில் 5 மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் கொண்ட குழுவினர், கள்ளுத்தவறணைக்குள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், அப்பகுதியில் இருந்த கடைகள், அவ்விடத்தில் தரித்து நின்ற வாகனங்கள் மற்றும் அப்பகுதியில் சென்ற வாகனங்களையும் அடித்து நொருக்கியுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து 3 கிலோமீற்றர் தூரத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கள்ளுத்தவறணையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 1 மணித்தியாலமாக அவ்விடத்தில் இருந்து அட்டகாசம் புரிந்த நபர்கள், அங்கிருந்துச் சென்றப் பின்னரே, பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago