Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, அக்கராயன் கிழக்கு காட்டுப்பகுதியில் கோணாவில் கிராமத்தின் யூனியன்குளம் வரையான காட்டுப்பகுதியில் பெருமளவு மரங்கள், நாள்தோறும் வெட்டப்பட்டு எடுத்துச்செல்லப்படுகின்றன என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற மாவட்ட சுற்றாடல் சட்ட அமுலாக்கல் குழுக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் மரங்களை அழிப்பதைத் தடுத்துநிறுத்துவது தொடர்பான இறுக்கமான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன.
இக்கூட்டத்தில் கிளிநொச்சி பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் அக்கராயன் கிழக்கில் மீள்குடியேற்றத்தின் பின்னர் தொடர்ச்சியாக மரங்கள் வெட்டப்பட்டு கிளிநொச்சி நகரத்துக்கும் பிறவிடங்களுக்கும் கொண்டுசெல்லப்படுகின்றன. கிளிநொச்சிக்குக் கொண்டுவரப்பட்ட மரங்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து கிளிநொச்சிப் பொலிஸார் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்த போதிலும் மரங்கள் வெட்டப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்தக் காட்டுப்பகுதியில் மரங்களை வெட்டவேண்டாமென கிராம மக்கள் அக்கராயன் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் முறைப்பாடு தெரிவித்தபோதும் கிராம அபிவிருத்திச் சங்கம் தங்களுடைய காடு அழிக்கப்படுவது தொடர்பாக பொலிஸாருக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ தகவல் வழங்கவில்லையெனவும் குறித்த பகுதியில் காடழிப்பு நடைபெறுவது தொடர்பாக அக்கராயன் பொலிஸாருக்கு தகவல் தெரிந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
அக்கராயன் ஆற்றுப்பகுதியில் மீள்குடியேற்றத்தின் பின்னர் பெருமளவு மணல் அகழ்வினால் நூற்றுக்கணக்கான மருதமரங்கள் அழிவடைந்துவரும் நிலையில் அக்கராயன் கிழக்குக் காட்டுப்பகுதியில் பெருமளவு மரங்கள் அழிக்கப்படுவதினால் எதிர்காலத்தில் அக்கராயன், கோணாவில் கிராமங்கள் பெரும் சூழலியல் ஆபத்தினை எதிர்கொள்ளவேண்டிய அபாயநிலை உருவாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
1 hours ago