2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சிக்கு 1,000 வீடுகள்

Niroshini   / 2016 மார்ச் 03 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

'கிளிநொச்சி மாவட்டத்துக்கு 1,000 வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக' மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

'சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக இவ்வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட மீள்குடியேற்றத்தின் பின்னர், நிரந்தர வீடுகள் கிடைக்காதவர்களுக்கு இவ்வீடுகள் பிரதேச செயலக ரீதியாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளன' என்று அவர் மேலும் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த 42,736 குடும்பங்களில் தற்போது 41,862 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.

மீள்குடியேறியுள்ள குடும்பங்களில் 17,886 குடும்பங்களுக்கும், மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படாத பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு பதிவுகளை மேற்கொண்டுள்ள 748 குடும்பங்களில் 489 குடும்பங்களுக்கும் இவ்வீடுகள் அமைத்துக் கொடுக்கவேண்டிய தேவையுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X