2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் 90% கால்நடைகளுக்கு மேச்சல் தரவைகள் இல்லை

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி மாவட்டத்தில் 90 சதவீதமான கால்நடைகள் திறந்த வெளி மேச்சல் தரவைகளில் வைத்து பராமரிக்கப்படுகின்றபோதும் அவற்றுக்கான மேச்சல் தரவைகள் இன்றி கால்நடைப் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் எஸ்.கௌரிதிலகன் தெரிவித்துள்ளார்.
 
விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் மிக முக்கிய வாழ்வாதாரமாக் கொண்ட மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது.
 
இந்நிலையில் கால்நடை வளர்ப்பை வாழ்வதாரமாகக் கொண்ட கால்நடை பண்ணையாளர்கள், தமது கால்நடைகளை பயிர் செய்கை காலங்களில் பராமரித்துக் கொள்வதற்காக மேச்சல் தரவைகள் இல்லாதது கணப்படுகின்றனர். 
 
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் காணப்படுகின்றன.
 
இந்நிலையில் மேற்படி கால்நடைகளை பயிர் செய்கை காலங்களில் வைத்துப்பராமரிக்கக் கூடிய மேச்சல் தரவைகள் இல்லாத நிலையில் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
 
இது தொடர்பாக கருத்துத்தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர்,
 
கிளிநொச்சி மாவட்டத்தில் 90 சதவீதமான கால்நடைப் பண்ணையாளர்கள் திறந்தவெளி மேச்சல் தரவைகளில் வைத்தே கால்நடைகளை பராமரித்து வருகின்றனர். இதுவே பண்ணையாளர்;களுக்கு இலாபம் கூடிய வளர்ப்பு முறையாகவும் தற்போதுள்ளது.
 
இந்த முறைகளை மாற்றி உள்ளக வளர்ப்பு முறைகளுக்கு பண்ணையாளர்;களை மாற்;றுவதற்கு நீண்ட காலம் எடுக்கும். மாவட்;டத்தில் மேச்சல் தரவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் பயிர் செய்கை நிலங்;களாகவும் குடியிருப்பு நிலங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.
 
ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் தலா 100 ஏக்கராவது மேச்சல் தரவைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,
 
மேச்சல் தரவைகளை இனங்கண்டு, வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு அவற்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றும் முதலில் மேச்சல் தரவைகளை அளவீடு செய்வதற்கு 32 மில்லியன் ரூபாய் நிதி தேவையாக உள்ளதாக நில அளவைத்திணைக்களம் கோரியுள்ளதாகவும் இதற்கான நிதியினை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் காணப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X