2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் கடும் மழை

George   / 2017 மார்ச் 13 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக, பல தாழ்நிலப் பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கின.

பிற்பகல் இரண்டு மணி முதல் நான்கு முப்பது  மணி வரை தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணடாக, வீதிகளில் வெள்ளம் நிரப்பி வழிந்ததோடு, கிராமங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

கடும் மழை காரணமாக, மீள்குடியேற்றத்தின் போது வழங்கப்பட்ட, தற்காலிக வீடுகளில் வசித்த மக்கள், பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன், காலபோக நெற் செய்கையின் அறுவடை தற்போது முழுமையாக  நிறைவு பெறாத நிலையில், விவசாயிகள்  பாதிப்புக்களுக்குள்ளாகியதுடன், அறுவடை செய்த நெல்லை உலர வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .