2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் 6,981 மரங்கள் நடப்பட்டுள்ளன

George   / 2016 ஜனவரி 09 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 6,981 மரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை (08) நடுகை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

கிளிநொச்சி பூநகரி பள்ளிக்குடாவில் நடைபெற்ற நல்லாட்சியின் ஓராண்டு நிறைவினையொட்டி நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

எமது மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களிலிருந்து பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட மாவட்டமாக விளங்கியது. போர் முடிவடைந்த பின்னர் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

2016ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு நல்லதொரு காலம் உள்ளதாக அனுமானிக்க முடிகின்றது. காரணம் மக்களின் வாழ்வாதாரத்தினை அண்டியதாகவும் மக்களுடைய வீட்டுத்திட்டங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றிலே முன்னேற்றகரமான வேலைத்திட்டங்கள் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

அதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாம் மகிழ்ச்சியடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளோம். இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிகழ்வு மர நடுகை நிகழ்வானது பல திணைக்களங்களூடாக அதாவது வனபரிபாலனத்திணைக்களம் மற்றும் சுற்றுச்சூழல் திணைக்களம், பனைஅபிவிருத்தி, தென்னை அபிவிருத்தி மற்றும் வாழ்வின் எழுச்சி, விவசாயம் போன்ற பல்வேறு வகையான திணைக்களங்களுடைய ஒத்துழைப்பின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட மரங்களை கொண்டு இம்மரநடுகை நிகழ்த்தப்படுகின்றது. 6981 மரங்கள் கிளிநொச்சி மாவட்டத்திலே நடுகைசெய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X