Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 03 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
துணுக்காய், அக்கராயன் பகுதிகளிலிருந்து பூநகரி முக்கொம்பன் வழியாக யாழ்ப்பாணத்துக்கு மணல் கொண்டு செல்வது தடைசெய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
பூநகரிப் பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (02) இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, முக்கொம்பன் கிராமமக்கள், பிரதிநிதிகள் முக்கொம்பன் கிராமம் வழியாக நாள்தோறும் யாழ்ப்பாணத்துக்கு மணல் டிப்பர்களில் எடுத்துச் செல்லப்படுவதாகவும் இதனால் தங்களுடைய கிராம வீதி சேதமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
யாழ்ப்பாணத்துக்கு எப்படி மணல் கொண்டுசெல்லப்படுகின்றது என கேள்வி எழுப்பப்பட்டபோது, கனியவளத் திணைக்கள அதிகாரி ஒருவர், முல்லைத்தீவு துணுக்காயின் அம்பலப்பெருமாள் குளத்திலிருந்து துணுக்காய் பிரதேச செயலாளரின் அனுமதியுடன் மணல் அக்கராயன், முக்கொம்பன், பூநகரி வழியாக யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மாவை சேனாதிராசா,
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து மணல் கிளிநொச்சி மாவட்ட வீதி வழியாக கொண்டு செல்ல முடியாது. அதற்கு அனுமதிக்க முடியாது என்பதே இக் கூட்டத்தின் தீர்மானம் எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
5 hours ago