2025 ஜூன் 30, திங்கட்கிழமை

காளான் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு

George   / 2016 மே 04 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வவுனியா தெற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட, அவுசதப்பிட்டிய கிராமத்தில் வடக்கு கிராம அபிவிருத்தித் திணைக்களத்தால்  2.5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள காளான் உற்பத்தி நிலையத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்த வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், பயனாளிகளைச் சந்தித்து கலந்துரையாடினார். 

இக்காளான் உற்பத்தித் திட்டத்தினால் 05 குடும்பங்கள் பயனடைவதுடன்  வவுனியா அக்போபுர கிராமத்திலும் இவ்வாறான ஓர் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதிலும் 05 குடும்பங்கள் பயனடையவுள்ளதாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்தார்.

அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எஸ்.மயூரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், வீதி அபிவிருத்தித் திணைக்கள மன்னார் வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர் ரகுநாதன், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் எம்.எஸ்.ஜானக்க, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.ரஜீப்  மற்றும் பயனாளிகள் ஆகியோர்  இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X