2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கசிப்புடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 மார்ச் 29 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட இருவருக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஜே.பிரபாகரன் திங்கட்கிழமை (28) தீர்ப்பளித்தார்.

மேலும், இருவருக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால கட்டாயச் சிறைத்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வட்டக்கச்சி பகுதியில் கடந்த ஆண்டு கசிப்புடன் கைது செய்யப்பட்ட பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதவான் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால கட்டாயச் சிறைத்தண்டனையும் விதித்தார்.

அதே இடத்தில் கடந்த ஆண்டு கசிப்புடன் கைது செய்யப்பட்ட நபரொருவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதவான், 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால கட்டாயச் சிறைத்தண்டனையும் விதித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X