2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கஞ்சா பொதிகளுடன் இளைஞர் கைது

George   / 2016 ஜனவரி 22 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்-

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதியுடன் மன்னார் பாலியாற்றுப் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் இன்று (22) வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட விசேட போதைப் பொருள் குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.யூ.ஹேரத் தெரிவித்தார்.

குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, 9 பேர் அடங்கிய பொலிஸ் குழுவினர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பாலியாற்று பிரதான வீதியில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

குறித்த நபரிடம் இரண்டு கஞ்சா பொதிகள் காணப்பட்டதாகவும் அவை 4 கிலோ 160 கிராம் எடை கொண்டதுடன் பல இலட்சம் ரூபாய் பெறுமதியானது என  மன்னார் மாவட்ட விசேட  போதைப் பொருள் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட விசேட  போதைப் பொருள் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X