Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 மே 02 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை காரணமாக கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் தற்போது சிறுபோக நெற்செய்கைக்காக திறந்துவிடப்பட்டு வயல்நிலங்களில் நிலப்பண்படுத்தலுக்காக நீர்ப்பாசனம் நடைபெற்றுவரும் நிலையில், வெப்பத்தினை தாங்கிக்கொள்ள முடியாத கால்நடைகள், வயல்நிலங்களில் நீருள்ள பகுதியில் தஞ்சமடையும் நிலைமை காணப்படுகின்றது.
வெப்பத்துடன் கூடிய வரட்சி நிலைமை தொடருமானால் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கால்நடைகள் உயிரிழப்புகளை எதிர்கொள்ளக்கூடிய அபாயநிலை ஏற்பட்டுள்ளது.
அக்கராயன்குளத்தை நம்பி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
45 minute ago