2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கடத்தப்பட்ட பாலை மரக்குற்றிகள் மீட்பு: கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்

Princiya Dixci   / 2016 மே 04 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

முல்லைத்தீவிலிருந்து ஹன்ரர் வாகனத்தில் யாழ்ப்பாணத்துக்கு கடத்தப்படவிருந்த 08 பாலை மரக்குற்றிகளை, இயக்கச்சிப் பகுதியில் வைத்து இன்று புதன்கிழமை (04) அதிகாலை 04 மணியளவில் மடக்கிப் பிடித்ததாகவும், கடத்தலில் ஈடுபட்டவர்கள் வாகனத்தை விட்டுவிட்டு தப்பித்துச் சென்றுள்ளதாகவும் பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பாலை மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக பளை பொலிஸ் நிலையத்துக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கபெற்றது. 

இதனையடுத்து, இயக்கச்சிப் பகுதியில் வீதித்தடையை ஏற்படுத்திய பொலிஸார், கடத்தல் வாகனத்தை மறித்த போது, வாகனம் நிறுத்தாமல் தொடர்ந்து சென்றுள்ளது.

வாகனத்தை பொலிஸார் பின்தொடர்ந்து சென்ற நிலையில், எழுதுமட்டுவாள் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு கடத்தல்காரர்கள் தப்பித்துச் சென்றனர்.

மீட்கப்பட்ட பாலை மரக்குற்றிகள், சுமார் 02 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையது எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X