Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Gavitha / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மார்க் ஆனந்த்
மன்னார்- நானாட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வங்காலை கிராமத்தின் நிலம், கடல் அரிப்பால் காவுகொள்ளப்படுவதாக கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த வங்காலை கிராமம், மன்னார் மாவட்டத்தில் கடல்வளத்தையும் விவசாயத்தையும் தொழிலாகக் கொண்ட கிராமமாகும். கடலின் நீர் மட்டம் சிறிய அளவில் உயர்ந்தாலும் கூட, கடல் நீர் கிராமத்துக்குள் புகுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் 25 வருடங்களாக ஏற்பட்ட கடலரிப்பு காரணமாக, தற்போது இரண்டு கிலோமீற்றர் வரை கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் மக்கள், நீண்டநாள் கோரிக்கைக்கு அமைவாக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட கடல் அரிப்பு பாதுகாப்புச் சுவரும் கடல் நீரால் சேதமடைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, அதனை புனரமைத்து, கிராமத்துக்குள் நீர் புகுவதை தடுக்குமாறு, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த கடல் அரிப்பு தடுப்பு சுவரை அமைத்துத்தரும்படி பல முறை சம்பந்தப்பட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்தும் கடல் அரிப்பு தடுப்பு சுவரை அமைப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இது வரையில் எடுக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
56 minute ago
1 hours ago