Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து மன்னாருக்கு வரும் மக்கள், மன்னார் கடலை படகில் சென்று சுற்றிப்பார்ப்பதற்கு கடற்படையினர் அனுமதி மறுத்து வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மன்னார் மாவட்ட மக்கள் உட்பட ஏனைய தமிழ்ப்பிரதேசங்களில் உள்ள மக்கள் , தாழ்வுபாடு பேசாலை மற்றும் வங்காலை போன்ற பிரதேச கடலுக்கு படகில் செல்வதற்காக அப்பகுதி கடற்கரைகளுக்குச் செல்கின்றனர். இருப்பினும், பல்வேறு காரணங்களைக் காட்டி அவர்கள் கடலைச் சுற்றிப் பார்ப்பதற்கான வாய்ப்பினை கடற்படையினர் நிராகரித்து வருகின்றனர்.
தமிழர்களை மீறி அழைத்துச் சென்றால் படகின் அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும் என படகு உரிமையாளர்களுக்கு கடற்படையினர் தெரிவிப்பதாகவும் அதனால், அவர்களும் மக்களை கடலுக்கு அழைத்துச் செல்வதை தவிர்த்து வருவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
எவ்வாறாயினும், தென்பகுதியில் இருந்து வருகை தரும் சிங்கள மக்களை தொடர்ச்சியாக கடற்படையினர் தமது படகுகளிலும் கடற்கரையில் உள்ள மீனவர்களின் படகுகளிலும் ஏற்றிச் சென்று கடலை சுற்றிக்காட்டுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
55 minute ago
1 hours ago