Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 மார்ச் 25 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டம், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாபத்துறை, கல்லாறு கடற்கரை பகுதியில் இருந்து 51 கிலோ 500 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாப்பொதிகளை, நேற்று வியாழக்கிழமை (24) மாலை மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
மன்னார் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மன்னார் பொலிஸ் நிலையத்தின் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.டபில்யு.ஹெரத் தலைமையிலான பொலிஸ் குழுவினர், நேற்று (24) மாலை முசலிப் பகுதிக்கு விரைந்து சென்ற நிலையில், சிலாபத்துறை கடற்படையுடன் இணைந்து சிலாபத்துறை கல்லாறுப் பகுதிக்குச் சென்ற போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள், 14 பொதிகளில் அடைக்கப்பட்ட கேரளா கஞ்சாப்பொதிகளைக் கல்லாறு கடற்கரைப் பகுதியில் தூக்கி எறிந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது சுமார் 14 பொதிகளில் அடைக்கப்பட்ட கேரளா கஞ்சாப்பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சாப்பொதிகள் சுமார் 51 கிலோ 500 கிராம் எடை கொண்டது எனவும் சுமார் 51 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது எனவும் மன்னார் பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
5 hours ago