Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட வவுனியா மாணவியின் படுகொலையை கண்டித்து மன்னாரில் நாளை வெள்ளிக்கிழமை(26) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
மாணவியின் கொலையுடன்; தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரியும், இனி வரும் காலங்களில் பொலிஸாரும், பாதுகாப்பு தரப்பும் அதனுடன் இணைந்த ஏனைய சிவில் மற்றும் சமூக அமைப்புக்கள் என்பன எமது மக்கள், மாணவர்கள், இளம் சிறார்கள் ஆகியோரை பாதுகாக்கின்ற நடவடிக்கைகளில் முழு மூச்சாக ஈடுபட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை மன்னார் பஸார் பகுதியில் இந்த ஆரப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்துக்கு சகல தரப்பினரும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
5 hours ago