Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 மார்ச் 01 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கிளிநொச்சிக் குளத்தைப் புனரமைப்பதற்குரிய நிதி கோரப்பட்டுள்ளது. அது கிடைக்கும் பட்சத்தில் குளத்தின் புனரமைப்புப்பணிகள் முன்னெடுக்கப்படுமென” நீர்ப்பாசனத்திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள ஓர் குளமாகவும் சுற்றுலாப்பயணிகளைக் கவரக்கூடிய இடமாகவும், இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் இடமாகவும் உள்ள கிளிநொச்சிக்குளம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் குளத்தின் உட்பகுதி மண் நிரம்பிக் காணப்படுகின்றது.
இக்குளத்தை புனரமைக்குமாறு மாவட்ட விவசாய சம்மேளனம் மற்;றும் விவசாய அமைப்புக்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களில் கோரிவருகின்றன.
இதேவேளை இக்குளத்தின் சுற்றாடலைப் பாதிக்கும் வகையில் குப்;பைகளைப் போடுதல் கழிவுப் பொருட்களைக் கொட்டுதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன், குளத்தைச்சூழவுள்ள அலைகரைப்பகுதி மற்றும் இரத்தினபுரம் ஆற்றின் இரு புறமும் உள்ள காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்விடயம் தொடர்பில், கிளிநொச்சி நீர்ப்பாசனத்திணைக்களத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “கிளிநொச்சிக்குளம் நகரத்தின் முக்கிய நீர்த்தேக்கமாகக் காணப்படுகின்றது.
இதனை ஆழமாக்கி புனரமைப்பதுக்குரிய திட்ட முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதுக்கான நிதி இவ்வாண்டு கிடைக்கின்ற சந்தப்பத்தில் அதன் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க முடியும். அத்துடன் இக்குளத்துக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பதைத் தடுத்து குளத்தின் அலைகரைப் பகுதிகளை எல்லையிட்டு மண் அணைகளை அமைப்பதன் மூலம் நில அபகரிப்புக்களை தடுக்கும் முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
7 hours ago
8 hours ago
05 Jun 2025