Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 02 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஷ்ணகுமார்
மழை வெள்ளம் தேங்கியுள்ள குழிகள், நீர் நிரம்பியுள்ள குளங்களுக்கு சிறுவர்கள் செல்வதைத் தவிர்க்குமாறு, கிளிநொச்சி பொது சுகாதாரப் பிரிவினரால், வீடு வீடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த காலங்களில் வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் போது அமைக்கப்பட்ட குழிகளுக்குள் சிறுவர்கள் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், வீடுகளில் உள்ளவர்கள் வெள்ளம் நிரம்பிய குழிகளை சிறுவர்கள் நாடுவதைத் தடை செய்யுமாறும், குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துவரும் நிலையில் குளங்களில் சிறுவர்கள் நீராடச் செல்வதை பெற்றோர்கள் கண்காணித்துத் தவிர்க்குமாறும் பொது சுகாதாரப் பிரிவினரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, மழை காலத்தில், கொதித்தாறிய நீரை அருந்துமாறும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் உணவுகளை அவ்வப்போதே தயாரித்துச் சாப்பிடுமாறும் பொது சுகாதாரப் பிரிவினரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
43 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
1 hours ago