Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Thipaan / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா நெளுக்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் வீதியைத் திருத்தித் தருமாறு கோரி, மூவின மக்களும் புதன்கிழமை(16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக திருத்தம் செய்யப்படாத இவ் வீதி மிகவும் பாதிப்படைந்து குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
உலுக்குளம் சந்தியில் ஒன்றுகூடிய தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வீதியின் இருமருங்கிலும் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அங்கிருந்த ஊர்வலமாக உலுக்குளம் பாடசாலை வரை சென்று ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்திருந்தனர்.
தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பயன்படுத்தும் இவ் வீதியில் அரச திணைக்களங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், ஆடைத்தொழிற்சாலை என்பன அமைந்துள்ள நிலையில் போக்குவரத்து செய்வதில் பெரும் இடையூறுகளை எதிர்கொள்ளவும் நேருவதுடன் விபத்துக்களும் சம்பவிக்கும் வீதியாக காணப்படுகின்றது.
இது தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியபோதிலும் வீதி திருத்தம் செய்து தரப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்ததுடன் சுமார் 25 கிலோ மீற்றர் தூரமான இவ் வீதுpயை செப்பனிட்டு தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, தமது கோரிக்கை அடங்கிய மகஜரை ஜனாதிபதி மற்றும்; பிரதமருக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
36 minute ago
44 minute ago
49 minute ago