2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சுனாமி அனர்த்தம்: மீண்டும் நினைவேந்தல்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ரஸீன் ரஸ்மின்

கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அடக்கம் செய்த முள்ளியவளை, நெடுங்கேணி வீதியில் அமைந்துள்ள  இடத்தில் 6 வருடங்களின் பின்னர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா நடவடிக்கை எடுத்துள்ளார்.

குறித்த இடத்தில் கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் சுனாமியினால் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.

எனினும், யுத்த காலத்தின் பின்னரான மீள்குடியேற்றத்தினை அடுத்து குறித்த இடத்தில் நினைவுகூறலை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

இது பற்றி கவனத்தில் எடுத்த நா.உ சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சுனாமியினால் உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இவ்விடத்தில் இம்மாத இறுதிப்பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X