Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, சிறைச்சாலைக்குரிய காணியில் தங்கியிருந்த இராணுவத்தினர், அந்தக் காணியை விடுவித்து வெளியேறியுள்ளனர்.
சிறைச்சாலைக்குச் சொந்தமான சுமார் 2 ஏக்கர் அளவிலான இந்தக் காணியில் கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையில் கிளிநொச்சி நீதிமன்றம் இயங்கியது.
புதிய நீதிமன்ற கட்டடம் கட்டப்பட்டு, 2011ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நீதிமன்றம் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் அக்காணியை இராணுவத்தினர் தங்கள் தேவைக்கு பயன்படுத்தினர்.
அதில் சிறிய காவலரண் அமைந்திருந்ததுடன், இராணுவ வாகனங்களை தரித்து வைப்பதற்கு அந்தக் காணியை இராணுவத்தினர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது அந்தக் காணியை விட்டு வெளியேறியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
31 minute ago
37 minute ago