2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: குடும்பஸ்தர் கைது

Niroshini   / 2016 மார்ச் 09 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

மன்னார், பெரிய கருஸல் கிராமத்தில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குடும்பஸ்தர் ஒருவரை இன்று புதன்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் பெரிய கருஸல் கிராமத்தில் திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை(08) சந்தேகநபரின் மனைவி வீட்டில் இல்லாத வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மன்னார் பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X