Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
ஆபத்துக்களிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மன்னார் பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிர்ப்புணர்வு ஊர்வலம், இன்று ஞாயிற்றுக்கிழமை (4) காலை மன்னாரில் இடம்பெற்றது.
மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ தலைமையில், மன்னார் நீதிமன்ற பிரதான வீதியில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமானது.
இதன்போது, ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், சிறுவர்களை ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் சிறுவர்களுக்கு எவ்வாறான வகையில் ஆபத்துகள் ஏற்படுகின்றன என்பதனை தெழிவுபடுத்தும் வகையிலும், பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இந்த ஊர்வலத்தில், மன்னார் முச்சக்கரவண்டி சாரதிகள், கிராம மட்ட பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் முடிவடைந்த நிலையில், அங்கு உரையாற்றிய மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிக்கோ,
'சிறுவர்களுக்கு பல்வேறு விதமாக உயிராபத்துக்கள் ஏற்படுகின்றது. சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். விபத்துக்களில் மாட்டிக்கொள்ளுகின்றனர் அல்லது வீடுகள் மற்றும் பொது இடங்களில் காணப்படும் கிணற்றுகளில் விழுந்து ஆபத்துக்களைத் தேடிக்கொள்கின்றனர்.
இவ்வாறு சிறுவர்கள் பல்வேறு விதத்தில் ஆபத்துக்களை தேடிக்கொள்ளுகின்றனர். இவ்விடையத்தில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும். மக்களின் பராமறிப்புக்களற்ற கிணறுகள், மாவட்டத்தில் காணப்படுகின்றது.
அக்கிணறுகளை அடையாளங்கண்டு, சுற்று வேலிகள் அடைக்க வேண்டும். விபத்துக்கள் ஏற்படாத வகையில், சிறுவர்களை வீதிகளில் நடமாட அனுமதிக்க வேண்டும். இவ்விடயத்தில், பெற்றோர் பொறுப்புடன் செயற்பட வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த ஊர்வலத்தில் மன்னார் வீதிப்போக்குவரத்துப்பிரிவு பொறுப்பதிகாரி குணசேகர, மாவட்ட வீதிப்போக்குவரத்து பொறுப்பதிகாரி சேனக்க, மன்னார் பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்புப்பிரிவு பொறுப்பதிகாரி அபேய விக்கிரம ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
2 hours ago