Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
சிறுவர்களை பாதுகாக்குமாறு கோரி வவுனியா பஸ் நிலையத்துக்கு முன்பாக புதன்கிழமை (30) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வித்தியா மற்றும் சேயா ஆகிய சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கொலை செய்த குற்றவாளிகளுக்கு அதிக பட்சத் தண்டனை வழங்கவேண்டும், சிறுவர் மீதான வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்று இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வைத்திய கலாநிதி சி.சிவமோகன், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராசா, எம்.பி.நடராசா, சு.இந்திரராசா உட்பட அரசியல்கட்சிகளின் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளெனப் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
27 Jun 2025
27 Jun 2025